பதிவுகள்

  • www.wasimakrampage.blogspot.com - padihal@yahoo.com - padihal@gmail.com

கவிதை


நாம்

நாம்
புறவையொன்றின் உடல் இசையில் அலைந்து
கச்சான் காற்றின் ஒளிச் சிதறல்களில் நுழைந்து
தொடு வானத்தின் சிதிலங்களில்
...
அமர்ந்நதிருக்க வேண்டும்

கட்டப்படாத சுவர்களின அத்திவாரச்
சாளரங்களை திறந்துவிட்டு
அதன் முற்றுகையில் சரணடைந்து
வெளியே தூசுச் சுணைகளாக பறக்க வேண்டும்

நம் எழுத்துக்களை ஒவ்வொன்றாய்ப் பிடிங்கி
மனித உடல்களில் ஒட்டி விட வேண்டும்

நுல் வடிவங்களை எறித்து அதன் சாம்பல் புகையில்
சடங்குகளை உலர்த்த வேண்டும்

புராணக் கதைகளை கரைத்து
காதுகளில் காய்ச்ச வேண்டும்

பாராட்டுப் பத்திரங்களையும் போர்வைகளையும்
கோர்த்து மாலை அணிவிக்க வேண்டும்

உடல் மேம்படாத உயிர்களின் மீது
அப்பியாசங்களை நிகழ்த்த வேண்டும்

வன்மங்களால் பாதகங் கொள்ளும்
வாழ்வியலை நாடு கடத்த வேண்டும்

மலை உச்சிகளில் இருந்து சிலருக்கான
தற்கொலைகளை நடத்த வேண்டும்

சட்டங்களைக் கொண்டு
சாணக்கிய சபைகளை அமைத்து
சாதணைகளை நிகழ்த்த வேண்டும்.

- எல். வஸீம் அக்ரம்
See More

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக