பதிவுகள்

  • www.wasimakrampage.blogspot.com - padihal@yahoo.com - padihal@gmail.com

நிஹலிசம்

கேட்டதை அறிந்தேன். அறிந்ததைப் பகிர்ந்தேன்.

நிஹலிசம் (நீலிசம்)

இல்லாமை தத்துவம் அல்லது நீலிசம் (Nihilism, ஒன்றுமில்லை என்ற பொருள்படும் இலத்தீன் சொல் nihil ) என்பது ஒரு மெய்யியல் ரீதியான நம்பிக்கை, இது, வாழ்க்கையின் அர்த்தமுள்ள அம்சங்களில் ஒன்று அல்லது மேற்பட்டதை மறுத்தலைக் குறிக்கிறது. மிகப் பொதுவாக, நீலிசம் என்பது இருத்தலின் இல்லாமை தொடர்பாக விவரிக்கப்படுகிறது, அதாவது வாழ்க்கை[1] எந்தவொரு நோக்கமும் பொருளும், அல்லது உள்ளார்ந்த மதிப்பும் இல
்லாமல் இருக்கிறது. நியாய இல்லாமை தத்துவவாதிகள், உண்மையில் நியாயம் என்று எதுவும் இல்லை, உருவாக்கப்பட்ட நியாயம் என்ற மதிப்புகள் மாயையால் உருவாக்கப்பட்டவை. நீலிசம், தத்துவரீதியான அறிவுசார், மாயை சார்ந்த, அல்லது மாயைசார்ந்த அறிவு வடிவங்களை எடுக்கக்கூடும், அதாவது முறையே, அறிவின் சில அம்சங்கள் சாத்தியமில்லை அல்லது நமது நம்பிக்கைக்கு மாறானதாக இருக்கும், உண்மையின் சில கூறுகள் உண்மையில் இருப்பதே இல்லை என்ற பொருள்களைத் தரும்.

அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் - சிறு பதிவு

அநுராதபுர மாவட்ட சிறுபான்மைச் சமூகம்

அநுராதபுரம் மாவட்டத்தில் சுமார் 71 386 மக்கள் வாழ்வதாக அண்மையில் தொகைமதிப்பு புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள சனத் தொகை கணக்கெடுப்பு அறிக்ரகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாவட்டத்தின் சுமார் 8.3 வீத சனத்தொகையாக கருதப்படுகின்றது. இத்துடன் சுமார் 3 391ற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் (இந்துக்கள்) வாழ்கின்றார்கள் என்று ஊகிக்கப்படுகின்றது. இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் இருப்பு, சமூக பொருளாதார அபிவிருத்திகள் இன்றைய கால கட்டத்தில் மிக இன்றியமையாத ஒன்றாக இருப்பது கவனிக்கத்தக்கது. கடந்த காலங்களை விட சமகாலத்தில் அநுராதபுர மாவட்ட சிறுபான்மை சமூகங்களின் அபிலாசைகளை அடைந்து கொள்வதுடன், முஸ்லிம் சமூகத்தின் இருப்பை உறுதி செய்து அவர்களது வாழ்வாதார அபிவிருத்திகளை அடைந்து கொள்வதற்கு ஏற்ற கட்டமைப்புக்களை வகுத்துக் கொள்வது இன்றைய போராட்டமாகவே கொள்ள வேண்டும்.

அநுராதபுர மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் சுமார் 110 முஸ்லிம் கிராமங்கள் இருக்கின்றன. ...


 
இம்மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செயப்பட்ட வாக்காளர்கள் இருகின்றார்கள் அல்லது இருக்க வேண்டும். (எத்தனை வாக்காளர்கள் இருக்கின்றார்கள் என்ற ஆய்வு ரீதியான தரவுகள் எந்தவொரு தரப்பினரிடமும் இதுவரை இல்லை) ஆனால் சுமார் 33 ஆயிரம் வாக்குகள் ஒவ்வொரு தேர்தலிலும் அளிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இதில் சுமார் 2000 – 3000 வாக்குகள் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளருக்கும் அளிக்கப்படுவதில்லை.

இப்பிரதேச சிறுபான்மைச் சமூகங்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தும் பல்வேறு சம்பவங்கள் சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் இடம் பெற்றுள்ளதை வரலாற்றுத் தகவல்கள் சான்றுபடுத்தியுள்ளன.

அநுராதபுர மாவட்டத்தில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் தொடர்ச்சியாக பெரும்பான்மைச் சமூகத்துடன் சமூக பொருளாதார கல்வி விடயங்களில் இனக்கத்துடனும் சகவாழ்வுடனும் இருந்துள்ளதனை அவதானிக்கலாம்.

இந்த இருப்பை குலைக்கும் வண்ணம் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளதை அவதானிக்கும் போது கவலையாக உள்ளது.
 
1. முஸ்லிம்களின் சமூகத்துள் நிலவுகின்ற நுண்தன்மையான பிரதேச   முரண்பாடுகள்
2. முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவுகின்ற சமய அமைப்புகளுக்கிடையிலான முரண்பாடுகள்.
3. ஏனைய சமூகங்களின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள்.

இவ்வாறான அடிப்படைக் காரணங்கள் அநுராதபுர மாவட்ட சிறுபான்மை மக்களின் இருப்பை நிறுவுவதில் ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினையாக சவாலாக அடையாளம் காணலாம்.

அநுராதபுரத்தில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் பிரதேச பிரிவுகளால் தூர்ந்த நிலையில் வாழ்கின்றனர். அதாவது இவர்கள் குவியப் படுத்திய சமூக அமைப்பாக அன்றி பெரிய இடைவெளி மிக்க நிலப்பரப்பில் வாழ்ந்து வருவதானது, இந்த மக்களின் கலை இலைக்கிய, கல்வி, சமூக, சமய, பொருளாதார, அரசியல் விடயங்களில் ஒருமைத்துவ நிலையை அடைவதில் தடையாக உள்ளது.
 
அநுராதபுர சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சியான சற்று ஆறுதல் அளிக்கும் வண்ணம் இருக்கின்றது. இருப்பினும் அதனூடான சமூகத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி வெளிப்பாடுகள் போதாமையைக் காட்டுவதாக சில அவதானங்கள் குறிப்பிடுகின்றன. இதற்கு மேற்சொன்ன காரணங்கள் பின்னூட்டலாய் அமைகின்றன. எனவே எதிர்கால சமூகத்தின் நலன் கருதி அநுராதபுர சிறுபான்மைச் சமூகங்கள் தமது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு உசிதாமான ஆரோக்கியமான செயற்பாடுகளை முன்வைக்க வேண்டும் என்பது எமது அவா.

கவிதை

ஒக்டோபர் கறுப்பு


விரிவான பொழுது விழிக்க
வயதுக்கு விஞ்சிய வானை முதுகு கூனி நோக்க
இரவு புடைத்து தொங்கியது
எங்கள் முகாம் குடிசைகளில்

அகதி அடையாள அணியில்
...
இதிகாசங்கள் இரண்டு தான் நின்று
நரைத்த இளமையை
திரும்பிப் பார்த்து அழுகின்றது
எங்கள் துயர நொடி