பதிவுகள்

  • www.wasimakrampage.blogspot.com - padihal@yahoo.com - padihal@gmail.com

படிகள் 31 - ஆளுமை

சிங்கள சினிமாவில் அசோக்க ஹந்தமக - எல். வஸீம் அக்ரம்

ஒளி ஊடகத்தை தனது பிரதான ஆயுதமாக ஏற்றுக் கொண்ட ஆசோக்க ஹந்தகம, சினிமா உலகிற்கு அறிமுகம் தேவையில்லாத ஒரு இயக்குனர். கடந்த 20 வருடங்களாக சிங்களச் சினிமாச் சூழலில் தவிர்க்க முடியாதவர் மட்டுமின்றி அதிக சர்ச்சைகளுக்கும் கேள்விகளுக்குமுட்பட்டவர்.

1992ல் இவரது முதலாவது திரைப்படமான 'சந்த கிணர' (ஆழழn டுயனல) தயாராகிக் கொண்டிருந்தது. அந்த திரைப்படம் அந்தந்த ஆண்டகளில் வெளியாகிக் கொண்டிருந்த ஏனைய திரைப்படங்களின் ஆக்கிரமிப்பினால் தனது இடத்தை அடைந்து கொள்ள முடியாமல் சுமார் ஆறு வருடகால இடைவெளிக்குப் பின் 1998ம் ஆண்டு வெளிவருகின்றது.

அதுவரை அசோக்க ஹந்தகமவை அவரது பல்கலைக்கழக மாணவ நண்பர்களைத் தவிர வேறு யாரும் இவரை ஒரு சினிமா சிருஷ்டி என்று அறிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை.

சந்த கிணர திரைப்படம் வெளிவந்து சில நாட்களுக்குள் ஹந்தகமவை முழுமையான, ஒரு ஒளி ஊடக செயற்பாட்டாளராக சர்வதேசமெங்கும் வரையறுத்துக் கொண்டனர். இவரை வெறுமனே உள்ள இயக்குனராக அன்றி சினிமாவில் குறிப்பாக மாற்றுச் சினிமாவில் முக்கிய ஒரு பிரதிநிதியாக உலகம் அடையாளம் கண்டு கொண்டது. சினிமாவுக்குள் தொடர்ச்சியாக கதையாடல்களுக்குட்பட்டு வருகின்ற அடையாளவாதம், யதார்த்த வாதம் போன்ற விடயங்களை தனது ஒளிப்டிமங்களால் குறிப்பாக சினிமாச்சித்திரங்ளாக நமது புலன்களுக்கு ஊடாக ஆகர்சிக்கின்ற பணியை ஹந்தகமவின் இந்த 20வருட கால வாழ்வு செயற்படுத்தியிருக்கின்றது.
சினிமா ஊடகத்தின் பொறுப்பை மிகவும் வலிமையாக பயன்படுத்தி அதன் பெறுபேறுகளை சமூகச் சிதைவுகளில், சமூகக் கட்டமைப் புகளில் ஒப்பிட்டுப் பார்க்கின்ற ஒரு போராட்டத்தை ஹந்தகமவின் சினிமா உலகு நிர்மானம் செய் துள்ளது. சினிமா என்ற ஒரு காட்சி ஊடகத்திலிருந்து அவர் தனது சமூகம் மீதான ஆழ்ந்த பிரக் ஞையை, கதையாடலை, இருப்பை மற்றும் எதிர்வு கூறலை சாத்திய மாக்க முடிந்துள்ளது.

சத்தியமாக ஹந்தகம சினிமா ஜாம்பவான் என்ற கீர்த்திக் கிரிடங் களால் முடிசூட்டப் பட்டாலும் அதே தளத்தில் அதிகப்படியான விமரிசனங்களுக்குள்ளும் விவாதங் களுக்குள்ளும் தாக்கங்களுக்குள்ளும் ஆட்பட்டிருக் கின்றார்.

சமூகத்தில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்துகின்ற சக்தி சினிமா என்ற கலைக்கு இருக்கின்றது. அதற்குள் கவிதை, இலக்கியம், சமூகம், நாகரீகம், ஓவியம், விமரிசனம், இசை, சமயம், விழிப்புணர்ச்சி, பாலியல், பொருளியல், அரசியல் என்ற எண்ணற்ற அணுப் பிரலயங்கள் கூடுகட்டியுள்ளன. இவ்வெண்ணக் கருக்கலின் ஒட்டுமொத்த வெடிப்பு சினிமா. சினிமாவின் ஒவ்வொரு அசைவு களிலும் எனது இருப்பைத் தேடுகிறேன். எனது சுயத்தை தேடுகிறேன் என்கிறார் திரு. ஹந்தகம.

நான் மக்களது வரம்புகளுக்குள் ஒரு சினிமாக்காரன் என்ற அடையாளத்தை பெற்ற போதும், நான் எவ்வகையான சினிமாக் காரன் என்ற வினா என்னை வாழ்நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருக்கின்றது. சமூகத்தின் ஒரு புறக் கண்ணாடியைக் கொண்டு எனது நோக்கையும், எனது அபிப்பிராயங்களையும் வெளிப்படுத்துவது எனது உருவாக்கத்தின் பின்னணி ஆகும்.

இது உண்மையில் ஒரு விளையாட்டு.  சமூகத் தினுட னான விளையாட்டு, அரசிய லுடனான விளையாட்டு, இன் னொரு முறையில் சொல்வ தாயின் சமூகத்தின் அசைவுகளு டனான ஒரு யுத்தம் சினிமா வாகும். நான் சினிமா என்ற ஒரு நுண் கலையின் அல்லது ஒரு உயிரூட்டியின் தன்மைகளை அதன் சொரூ பங்களில் இருந்து தான் வெளிப்படுத்த துணிகிறேன். மாறாக சடவாத சம்பிரதாயங்களில் இருந்தல்ல. குறிப்பாக சமூகம் ஒரு அறியாமைச் சுமையை சுமக்க எத்தனிக்கிறது என்றால், அதற்கு ஒத்தடம் கொடுக்க எனது சினிமா சிரம் சாய்க்காது என்கிறார் ஹந்தகம.


சினிமாவை அவர் ஒரு வெற்றுச் சட்டமாக பார்க்காது தமது விவ ரணங்களை அனுப்புகின்ற ஒரு பிரதான மூலமாகப் பார்க்கின்றார். ஹந்தகமவின் சினிமா அவரின் நேரடி ஆக்கிரமிப்புக்களால் ஏற் பட்ட காயங்களா? என்ற வினாவை அவரிடம் கேட்கத் தோனுகிறது.

இவரின் இரண்டாவது திரைப்படம் 'மே மகே சந்த' (வுhளை ஐள ஆல ஆழழn) இது எனது நிலவு 2000ம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படம் தமிழ் சிங்கள உறவு பற்றி பேசுகின்றது. இந்தத் திரைப்படம் 2002ம் ஆண்டுகளில் இலங்கையில் இருந்த யுத்தம், சமாதானம், முரண்பாடு, இனவாதம் உள்ளிட்ட அம்சங் களைப் பற்றி நேர்த்தி மிகுந்த பாணியில் பேசுகின்றது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த 'தனி தட்டுவென் பியாம்பன்ன' - 2002. (ஒற்றை சிறகுகளால் பறத்தல்) என்ற திரைப்படம் பெண்ணியம் பற்றிப் பேசுகின்றது. ஒரு பெண் இரண்டு நிலை சார்ந்த பார்வைகளால் அவதி யுருவதும் அவளது எண்ணங்கள் சமூகத்தின் மத்தியில் தோல்வி யடைவதும் இந்தப் படத்தின் கதைக்கருவாகும். அதாவது ஓரினச் சேர்க்கை இதன் முக்கிய குறியாகும்.


2005 ம் ஆண்டு ஹந்தகமவின் தணிக்கைக்கு உட்பட்ட படம் 'அக்சரய' (யு டுநவவநச ழக குசைந) இத் திரைப்படத்தில் உள்ள காட்சிகள் தாய்க்கும் சேய்க்கும் இடையில் இருக்கின்ற பரஸ்பரத்தைப் பற்றிப் பேசுகின்றது என்ற வாதம் ஹந்தகமவால் முன்வைக்கப்பட்ட போதும், அது பாலியல் கருத்தைப் பதிவு செய்கின்றது என்ற வாதத்தால் தணிக்கை உட்பட்டது. சமய வாதிகளும் அடிப்படை வாதிகளும் திரைக்கு வர முன்னர் வன்முறையில் இறங்கியதால் தடைசெய்யப்பட ஏதுவானதுடன் இவர் சமூக விரோதி என்றும் பொதுவாக ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டார்.

இந்தத் திரைப்படம் தணிக்கைக்கு உட்பட்டதன் பின்னரே ஹந்த கமவின் ஆளுமை விரிவாகப் பேசப்பட்டது.

இவரது படங்கள் பொதுவாக கலாசார அடிப்படை வாதிகளி னதும், மரபு வாதிகளினதும் எதிர்ப்பைப்பெற்றுக்கொண்டன. அக்சரய திரைப்படம் திரைக்கு வராதபோதும் அது சீடிக்களாக வெளிவந்திருந்தமை குறிப்பிடத் தக்கது. இறுதியாக வெளிவந்த இவரது திரைப்படம் 'விது' இத் திரைப்படம் அரசியல் தலைமை களால் பாதிக்கப்பட்ட தனிமனித ஆளுமை நிறைந்த ஒரு சிறுவன் பற்றிப் பேசினாலும் ஆழமான நடைமுறை அரசியல் பற்றி குறியீட்டுப் படிமங்களுடன் வெளிப்படுத்தி இருந்தது.

இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியல் கலாசாரம் எதிர்கால சந்ததியினரின் இருப்பை கேள்விக்குட்படுத்துகின்ற விதம் பற்றிய ஒரு அறிவுபூர்வமான வெளிப்பாட்டைத்தந்தது விது. சிறுவர் திரைப்படம் என்ற தோரணையிலேயே விது தன்னைப் பாதுகாத்துக்கொண்டது. 2010ஃ2011 ஆகிய ஆண்டுகளில் ஊடகங் களால் அதிக கதையாடலுக்கு உட்பட்ட திரைப்படம் விது.

இவ்வாரான திரைப்படங்கள் அரசியல் வர்ணங்களால் பல சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் உட்பட்டிருந்தமை கண்கூடு.

இறுதியாக இவரது திரைப் படங்களில் பாலியல் காட்சிகள் வெள்ளிடையாகக் காட்டப் படுவதாக விமரிசனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவரது சந்த கிணர, மே மகே சந்த, தனி தட்டுவென் பியாபன்ன, அக்சரய போன்ற திரைப்படங்களில் பாலியல் காட்சிகள் வெளிப் படையாக காட்டப்பட்டுள்ளன.


சடவாத மத இறுக்கங்கள் கலந்த ஒரு சமூகத்தில் இவ்வாறான பாலியல் காட்சிகள் கேள்விக் குட்படுவதும் அது ஏற்றுக் கொள்ளப் படுவதும் இருபக்க நியாயங்களைக் கொண்டிருந்தன.

சுனாமிக்குப் பின் எழுந்த சமூக ஒற்றுமை கருத்து முன்மொழிவை, வலுவூட்டும் வண்ணம் இவரது தொலைக்காட்சி நாடகம் ஒன்று தெரன தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களுக்கிடையில் உள்ள இனத்துவ, அடையாளப் பிரிவுகளை ஒப்பீட்டும், அதனை களைவதற்குமான ஒரு ஊடக முயற்சியாக அமைந்தது. 2005ம் ஆண்டு இந்த தொலைக்காட்சி நாடகம் மக்களிடத்தில் பெரு வரவேற்புப் பெற்றது.
அண்மையில் ஹந்தகமயின் 'இனி அவன'; என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது. இத்திரைப்படம் தமிழ் விடுதலைப் போராளி
ஒருவரின் வாழ்வைப் பேசுகின்றது

அசோக்க ஹந்தகம என்பவரை நான் முதல் முதல் அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் 2005ம் ஆண்டு சந்தித்தேன். தணிக்கைக்கு உட்பட்ட 'அக்சரய' என்ற திரைப்படம் தொடர்பாக அப்போதிருந்த விவாதங்களை ஒருங்கிணைத்த நிகழ்வு அது. அந் நிகழ்வில் என்னை கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா அவர்கள் அசோக்க ஹந்தகமவிற்கு அறிமுகம் செய்துவைத்தார்.

அந்த அறிமுகம் அவருடனான நட்புக்கு வழிசமைத்திருந்தது.

திரு. ஹந்தகம அவர்களது ஆளுமையை இன்று சர்வதேசம் மெச்சிக் கொண்டிருக்கின்றது. அவ்வாறான ஒரு வேளையில் அவர் பற்றி பதிவுகள் ஈழத்து சினிமா வாசகர்களுக்கு சற்று ஆருதல் தரும் என்று நம்புகிறோம். அதற்கு படிகள் தனது பங்களிப்பை வழங்குகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக