பதிவுகள்

  • www.wasimakrampage.blogspot.com - padihal@yahoo.com - padihal@gmail.com

உங்கள் பார்வைக்கு எங்கள் கருத்து - ஆசிரியர் கருத்து: படிகள் 31


வடமத்திய மாகாண சபையின் தற்போதைய கல்வி, தகவல் தொழிநுட்ப மற்றும் கலாசார அமைச்சர் கௌரவ எஸ்.எம். பேசல ஜயரத்தன பண்டார அவர்களின் வழிகாட்டலில் அமைச்சின் செயலாளர் அவர்களின் ஏற்பாட்டில் மகாண தமிழ் சிங்கள எழுத்தாளர்களுடனானா சந்திப்பொன்று அண்மையில் மாகாண அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 எழுத்தாளர்களுடனான இச்சந்திப்பில் அநுராதபுர மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்து தமிழ் மொழி மூல எழுத்தாளர்கள் 5 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா, கெகிரா சுலைஹா, நாச்சியாதீவு பர்வீன், அநுராதபுரம் றஹ்மதுல்லாஹ், எல். வஸீம் அக்ரம் அகியோர் ஆவர்.
இச்சந்திப்பின் பிரதான நோக்கம் மாகாண சபையின் கீழ் தமிழ் சிங்கள எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து அவர்களது வெளியீடுகளுக்கு பின்புலம் ஒன்றை உருவாக்குவதாகும்.
இச்சந்திப்பில் தம்மைத் தாமே அறிமுகம் செய்து கொண்ட எழுத்தாளர்கள் தமது எழுத்துக்களை நூல் உருவில் கொண்டுவருவதற்குரிய பிரச்சினைகளை முன்வைத்ததுடன். பாடசாலை மட்டத்திலிருந்து எழுத்தாளர்கள் உருவாகுவதற்கான பொறிமுறைகள் ஏற்படுத்தப்படுவதன் அவசியங்களையும் குறிப்பிட்டனர்.
மிகவும் அறிவுபூர்வமாகாவும் எளிமையாகவும் எழுத்தாளர்களது பிரச்சினைகளை அடையாளம் கண்டு கொண்ட அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் நூலுருவாக்கங்களை நெறிப்படுத்தி அதன் அச்சகப் பிரச்சினைகளை தீரப்பதற்கான எதிர்கால திட்டங்களை முன்மொழிந்தனர்.
அதில் மாகாண கல்வி அமைச்சிற்கு கொண்டுவரப்படவுள்ள அச்சியந்திரங்கள் ஊடகா மாகாண எழுத்தளார்களின் நூற்களை அச்சிட்டு குறைந்தபட்ச உதவிகளை எழுத்தாளர்களுக்கு வழங்குவதனை கருத்திட்டமாக கொண்டுள்ளதனை குறிப்பிட்டனர்.
குறிப்பாக இதுவரை இம்மாகணத்தில் தமிழ் மொழி மூல எழுத்தாளர்களுக்குள்ள பிரச்சினைகள் பற்றியும் அவர்களது கடந்தகால செயற்பாடுகள் பற்றியும் அவர்களது சமூக நல்லினக்க எழுத்துத்துறை பங்களிப்புகள் பற்றியம் விதந்து கருத்துக்கள் முன்மொழியப்பட்டதன் காரணமாக அமைச்சர் மிக நெருக்கமான அணுகுமுறைகளை கையாண்டமை குறிப்பிடத்தக்கது
வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்ற இந்நிகழ்வு எழுத்தாளர்களது பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான வழிகளைத் திறக்கும் என்ற நம்பிக்கை இருப்பதுடன். பிரதேச எழுத்தாளர்கள் இந்த விடயத்தில் தீவிர செயற்பாடுகள் ஊடாக தமது இலக்குகளை அடைந்து கொள்ள துணியவேண்டும் என்றும்  படிகள் இங்கு விதந்து குறிப்பிட விளைகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக